.

Wednesday, July 29, 2015

==============================================
GM அலுவலக கிளைபொதுக்குழுக் கூட்டம்
30-07-2015 மதியம் உணவு இடைவேளை 
தலைமை: தோழர்.D.துரை கிளைத்தலைவர்

வரவேற்புறை: தோழர்.P.ஜெயராஜ்

சிறப்புரை : தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்டசெயலர்

நன்றியுரை : தோழர்.S.குருபிரசாத்,
அனைவரும் வருக!
தோழர்.S.ராஜேந்திரன் கிளைச்செயலர்
===========================================================
30-07-2015 காலை 11-மணியளவில் கடலூரில் 
WORKS COMMITTEE கூட்டம் நடைபெறும்
========================================================================
கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழுக்கூட்டம் கிளைத்தலைவர் தோழர். K.பாண்டியன் தலைமையில் இன்று(29-07-2015) மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர்.P.அழகிரி கலந்து கொண்டார். மற்றும் கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் அதிகாரிகள்/உறுப்பினர்கள் கலந்தாய்வுக்கூட்டத்தின் நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டது.
நிர்வாக தரப்பில் இருந்து போதுமான அளவு முன்னேற்றம் தேவைப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சி கோட்டப்பொறியாளர் ஊழியர் சங்க பிரதிநிதிகளை சந்திப்பதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. ஊழியர் சங்க பிரதிநிதிகளை மாதம் ஒருமுறையேனும் சந்தித்து பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
செப்டம்பர்’2 வேலைநிறுத்தத்தில் தோழர்கள் அனைவரும் முழுமையாக கலந்துகொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தை கிளை செயலர் S.மணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
========================================================================

No comments:

Post a Comment