.

Thursday, April 9, 2015

தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
(TMTCLU)
மாவட்டச் சங்கம் கடலூர்.
முக்கிய செய்தி


  • ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் VDA உயர்ந்துள்ளது .இதன் மூலம்20+113 =233  நாளொன்றுக்கு கிடைக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  •  5 வருடங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகின்றது . அதன் அடிப்படையில் 2009 – ல் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் தற்போது 2015ல் மாற்றம் செய்யப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் விரைவில்  தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படும். அந்த வகையில் நமது NFTE மாநிலச் சங்கமும், நமது TMTCLU மாநிலச் சங்கமும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது  என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • செக்யூரிட்டி பணி செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க NFTE மாவட்டச் சங்கமும்,  நமது TMTCLU மாவட்டச் சங்கமும்   உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது விரைவில் செக்யூரிட்டி பணிக்கு உரிய ஊதியம் கிடைக்கும் என நம்புகின்றோம்.  
TMTCLU மாவட்டச் சங்கம்
      கடலூர்  

No comments:

Post a Comment